திண்டுக்கல் அக்டோபர் 30
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 பெண்களுக்கான பந்து வீசும் போட்டி நடைபெற்றது .

இந்த போட்டியில்
இரண்டு நிறங்களில் அணிகள் பிரிக்கப்பட்டன நீலம், கருப்பு அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது..


பள்ளி இயக்குநர் கிளாட்வின்,முதல்வர் நான்சி விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்தார்கள்…

முதல் சுற்றாக 15 நிமிடங்கள் இரு நிற அணியினர் கலந்துகொண்டு விளையாடினர்.
10 நிமிட இடைவெளிக்குப் பிறகு
இரண்டாவது சுற்றாக
நீல நிற அணியினர் கருப்பு நிற அணியினர் விளையாடினர்.
பெண்களின் இரு அணியினரும் பந்தை சுழற்றியும், பாய்ந்தும் வேகமாகவும் ஆர்வமாகவும்
விளையாடினர்..

இறுதி சுற்றில் நீல நிற அணியினர்
30: 28 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.
விளையாட்டு போட்டியினை ஆசிரியர்கள் பள்ளி ஊழியர்கள் மற்றும் பெஸ்கி கல்லூரியின் முன்னாள் அருட்தந்தைகள் என ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்

மாணவர்கள் தங்களின் பெற்றோர்களை கர ஒலி எழுப்பி உற்சாகப்படுத்தி மகிழ்ந்தனர்
வெற்றி பெற்ற பெற்றோர்களுக்கு பள்ளியின் விளையாட்டு விழாவின் போது சான்றிதழ்கள் வழங்கப்படும்.
சனிக்கிழமை பெண்களுக்கான இறகுப்பந்து விளையாட்டு போட்டி லயோலோ டெக் பள்ளியின் உள் அரங்கத்தில் நடைபெறும்..














