திண்டுக்கல் அக்டோபர் 28.
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கையுந்து பந்து போட்டி நடைபெற்றது .
இந்த போட்டியில்
நான்கு நிறங்களில் அணிகள் பிரிக்கப்பட்டன மஞ்சள், நீலம், சிவப்பு ,கருப்பு நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது..
பள்ளி இயக்குநர் கிளாட்வின்,முதல்வர் நான்சி விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்தார்கள்…

முதல் போட்டியாக மஞ்சள் மற்றும் கருப்பு நிற அணியினர் இருவரும் போட்டியில் கலந்துகொண்டு விளையாடினர். இதில் மஞ்சள் நிற அணியினர் வெற்றி பெற்றனர்.

இரண்டாவது போட்டியாக
சிகப்பு மற்றும் நீல நிற அணியினர் விளையாடினர்.
இதில் சிவப்பு நிற அணியினர் வெற்றி பெற்றனர்..
இறுதி சுற்றாக சிவப்பு நிற அணியினருக்கும் மஞ்சள் நிற அணியினருக்கும் போட்டி நடைபெற்றது இதில்
30: 24 என்ற கோள் கணக்கில் மஞ்சள் நிற அணியினர் வெற்றி பெற்றனர்.
விளையாட்டு போட்டியினை ஆசிரியர்கள் பள்ளி ஊழியர்கள் மற்றும் பெஸ்கி கல்லூரியின் முன்னாள் அருட்தந்தைகள் என ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்

மாணவர்கள் தங்களின் பெற்றோர்களை கர ஒலி எழுப்பி உற்சாகப்படுத்தி மகிழ்ந்தனர்
நாளை மகளிருக்கான கொக்கோ போட்டிகள் 4:15 மணி அளவில் லயோலா டெக் பள்ளியில் நடைபெறும்.
வெற்றி பெற்ற பெற்றோர்களுக்கு பள்ளியின் விளையாட்டு விழாவின் போது பரிசுகள் வழங்கப்படும்.















