திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கொடைக்கானல், பூண்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சுரேஷ்(27) என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர்கள் கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலையம் புகார் அளித்தனர்.
இதுகுறித்து கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட சுரேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு கொடைக்கானல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்













