திண்டுக்கல்லை சேர்ந்த மாரிமுத்து(45) என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமாக திண்டுக்கல், ம.மு.கோவிலூர், நாகம்பட்டி ரோடு பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த சீலப்பாடி குழிப்பட்டியை சேர்ந்த நடராஜன் மகன் வினோத்குமார்(29) என்பவர் மாரிமுத்துவின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி சட்டை பையில் இருந்த ரூ.2000 பணம், செல்போன் ஆகியவற்றைப் பறித்து சென்றதாக மாரிமுத்து அளித்த புகாரின் பேரில்
தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட வினோத்குமாரை கைது செய்து வழக்கு பதிவு செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்













