தமிழகத்தில் தஞ்சை பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம், ஸ்ரீரங்கம், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் வரிசையில்
திண்டுக்கல் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் பல விசேஷமான சிற்பங்கள், கலைநயம் மிக்க சிற்பங்கள், ஒரே கல்லிலான சிற்பங்கள், மற்றும் சிற்பக் கலை உள்ளிட்ட பல விசேஷங்களை கொண்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு திண்டுக்கல் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலை சுற்றுலா தளமாக மாற்ற முடிவு செய்துள்ளது இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
மேலும் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவில் சுற்றுலாத்தலமாக மாறிவிட்டால் அது திண்டுக்கல் மாநகரத்திற்கு பல்வேறு பெருமை சேர்க்கும் விஷயங்களில் இதுவும் ஒன்றாக மாறிவிடும் என்று திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி தெரிவித்தார்.
R.மோகன் கணேஷ் மாவட்ட செய்தியாளர் திண்டுக்கல்













