நத்தத்தில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது, 730 வெளி மாநில லாட்டரி சீட்டுகள், ரூ.4700 பணம் பறிமுதல் – தனிப்படை போலீசார் நடவடிக்கை
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் நத்தம் பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது நத்தம் குடகிபட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த சன்னாசி மகன் முருகன்(52) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 730 வெளி மாநில லாட்டரி சீட்டுகள், ரூ.4,700 பணம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து நத்தம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு நத்தம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
வெளி மாநில லாட்டரி சீட்டுகள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து மொத்தமாக நத்தத்திற்கு வாங்கி வந்து சில்லறை விற்பனை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
R. மோகன்கணேஷ் மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.













